வெள்ளி, 9 நவம்பர், 2012

புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம்


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அவனுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நிலையான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்களுடன் எவ்விதத்தில் போர் புரிகிறார்களோ, அவ்விதத்தில் நீங்களும் அவர்களுடன் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.(9:36)

ஹஜ் பெருநாள் உரை: S.K. 2012 NAGAR KOVIL

புதன், 7 நவம்பர், 2012

மறந்துவிட்ட-மறுமை-நாள்

தேன் ஈ கூட்டில் கல் வீசினால்?



தேன் ஈ கூட்டில் கல் வீசினால்?
தேன் ஈ கூட்டில் கல் வீசினால் தேனீக்கள் கோபம் கொள்ளும், தேனீக்கள் பல பக்கங்களிலிருந்தும் பறந்து சென்று கிட்டியவைகள் மீதெல்லாம் கொட்டி தமது கோபத்தை திர்த்து விடும், கல் வீசியவன் திட்டமிட்டபடி ஒளிந்து கொள்வான். போவோர் - வருவோரை தேனீக்கள் கொட்டும் பொது மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். கொட்டியது என்ற காரணத்தைக் கூறி தேனீக்களை அழிக்கலாம் அல்லது அடக்கலாம். மக்கள் பக்கமிருந்து பரிந்து பேசுதல் இருக்காது மாறாக அழிப்பது தாம் நியாயம் என்று பேச வைத்து விடலாம். இது இன்றும் அன்றும் இஸ்லாமிய எதிரிகளின் வக்கிர எண்ணமாக உள்ளது.