ஞாயிறு, 30 டிசம்பர், 2012

புது வருடமும், முஸ்லிம்களும்!

எழுதியவர்:மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி"
புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்!?.
தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது ஒரு விதத்திலும் அறிவுப்பூர்வமான விடயமாக இருக்க முடியாது. மறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே என்று கவலைப்பட்டு, அதைப் பின்னோக்கிப்பார்த்து தனது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சரி செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற ஒரு அடியானாக தன்னை எவ்வாறு மாற்றிக்கொள்வது என்பதைப் பற்றி சிந்திப்பவனே உண்மையான புத்திசாலியாக இருக்க முடியும்.

திங்கள், 10 டிசம்பர், 2012

உணவின் சில ஒழுங்குகள்

எழுதியவர்:- அஷ்-ஷைக்: K. S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி
அழைப்பாளர், அல்-கோபர் தாஃவா நிலையம் சவூதி அரேபியா

சாப்பிட்டு முடிந்த பின் ஓதும் துஆ

النَّبِيِّصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ :” مَنْ أَكَلَ طَعَامًا فَقَالَ :اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍمِنِّي وَلا قُوَّةٍ

“”என் முயற்சியோ, என்வலிமையோ எதுவுமின்றி எனக்கு உணவளித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்

உணவின் சில ஒழுங்குகள்

بسم الله الرحمن الرحيم

நபி(ஸல்)அவர்கள் சாப்பிடுவதற்காகவும்ஒழுங்குமுகைளை கற்றுத்தந்துள்ளர்கள் அதை பேணி நடந்தால் நாம் உணவு உண்பதும்அல்லாஹுவிடத்தில் கூலி பெற்றுத்தரக்கூடிய அமைந்து விடும்.

அன்பான வேண்டுகோள்

بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு
அன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே! நீங்கள் எல்லா விதமான பாக்கியங்களையும் நிறைவாகப்  பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை  வேண்டுகின்றேன்.
இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி புதிய புதிய பெயர்களில் அமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் சமூகத்தில் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்துகின்ற நிலை சமூகத்தில் தொடர்கதையாகி விட்டது. இதன் மூலம் புதிய அமைப்பு காணக்கூடியவர்கள் என்ன

மனிதர்களே!

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம், நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (அல்குர்ஆன்: 49:13)

வெள்ளி, 9 நவம்பர், 2012

புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம்


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அவனுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நிலையான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்களுடன் எவ்விதத்தில் போர் புரிகிறார்களோ, அவ்விதத்தில் நீங்களும் அவர்களுடன் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.(9:36)

ஹஜ் பெருநாள் உரை: S.K. 2012 NAGAR KOVIL

புதன், 7 நவம்பர், 2012

மறந்துவிட்ட-மறுமை-நாள்

தேன் ஈ கூட்டில் கல் வீசினால்?



தேன் ஈ கூட்டில் கல் வீசினால்?
தேன் ஈ கூட்டில் கல் வீசினால் தேனீக்கள் கோபம் கொள்ளும், தேனீக்கள் பல பக்கங்களிலிருந்தும் பறந்து சென்று கிட்டியவைகள் மீதெல்லாம் கொட்டி தமது கோபத்தை திர்த்து விடும், கல் வீசியவன் திட்டமிட்டபடி ஒளிந்து கொள்வான். போவோர் - வருவோரை தேனீக்கள் கொட்டும் பொது மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். கொட்டியது என்ற காரணத்தைக் கூறி தேனீக்களை அழிக்கலாம் அல்லது அடக்கலாம். மக்கள் பக்கமிருந்து பரிந்து பேசுதல் இருக்காது மாறாக அழிப்பது தாம் நியாயம் என்று பேச வைத்து விடலாம். இது இன்றும் அன்றும் இஸ்லாமிய எதிரிகளின் வக்கிர எண்ணமாக உள்ளது.

சனி, 27 அக்டோபர், 2012

இன்னும் ஏன் தாமதம்


அன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே! இன்னும் ஏன் தாமதம் ? உங்களில் எவர் செயலால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன் (அல்லாஹ்) மரணத்தையும், வாழ்வையும் படைத்தான். மேலும் அவன் (யாவரையும்) மிகைத்தவன், மிக்க மன்னிப்பவன். (அல்குர்ஆன் – 67:02)
இலக்கை நோக்கிப் பயணிக்கிற ஒவ்வொரு கொள்கை கூடாரங்களுக்கும், இளைஞர்கள் தான் இதயத் துடிப்பு. ஏனெனில் இலக்கு எதுவாயினும் அதனை வீரியத்தோடு கச்சிதமாய் முடிக்கும் ஆற்றல் இளைஞர்களிடத்திலேயே மிக அதிகம். எத்துணையோ தற்காலிக உலக இலக்குகளுக்காக, தங்களின் வாழ்வையே அர்ப்பணிக்கிற இளைஞர்கள் இருக்கிறபொழுது,

செவ்வாய், 16 அக்டோபர், 2012

சூனிய மாயையில் இயக்க வாதிகள்



சூனிய மாயையில் இயக்க வாதிகள்
நபி (ஸல்) அவர்களை சூனியத்தின் மூலம் யூதர்கள் பாதிப்படையச்செய்தார்கள்
என்ற ஹதீஸை மறுப்பதற்காக ஒரு சாரர் எத்தனையோ கற்பனை கேள்விகளை கேட்டு
வாதங்களை நிரப்பி குர்ஆன், ஹதீஸின் முக்கியத்துவத்தை மழுங்கடிக்க செய்து
வாதங்களின் நியாயங்களை மட்டுமே மனதில் ஏற்றி மார்கத்தை விளங்கிக் கொள்ளக்
கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கும் அபாயமான ஒரு சூழலை உருவாக்க முயற்சி
நடந்து கொண்டிருப்பதை காண்கின்றோம்.

வியாழன், 4 அக்டோபர், 2012

இஸ்லாமி எழுச்சி கோவையில்

இறைவனின் திருப்பெயரால்…

சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்கள் / இனப்படுகொலைக

ள்
கலவரங்களுக்கு இணையாய் மீடியாக்கள் நடத்தும் சர்வதேசப் போர்

இஸ்லாமிய சிந்தனைக்கு திரையிட மறைவில் நடக்கும் உலகளாவிய சதிகள்

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

JAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி உரை:முஹம்மது ஷ.பி தலைப்பு:படைத்தவனை அறிந்துகொள்ளுங்கள்.

கோவை சகோதரர்கள் ஷஃபி,

தலைப்பு: சுவனத்திற்கு வாழ்த்து பெற்றவர்கள் உரை: மௌலவி .S. கமாலுத்தீன் மதனீ

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள்


 துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள்
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களைவிட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதும் மகத்தானதும் வேறு எதுவும் இல்லை.  அந்த வரிசையில்அய்யாமு அஷ்ரு தில்ஹிஜ்ஜா”   “துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள்மிகவும் முக்கியமான நாட்களாகும்.  அல்லாஹ் குர்ஆனில் வல்ஃபஜ்ரி வலயாலின் அஷ்ர்
இறைவனின் திருப்பெயரால்…

சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்கள் / இனப்படுகொலைகள்
கலவரங்களுக்கு இணையாய் மீடியாக்கள் நடத்தும் சர்வதேசப் போர்

08.09.2012 அன்று நாகர்கோயில் ஹவ்வாநகர் மஸ்ஜித் ஸலாமத் வளாகத்தில் குமரிமாவட்ட தாயிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது .அதில் நாகர்கோயில் JAQH கிளைத் தலைவர் S.கமாலுத்தீன் மதனி "தாயிகளுக்குரிய பண்புகள்" எனும் தலைப்பில் பயிற்சி வழங்கினார் .

புதன், 12 செப்டம்பர், 2012

IFTHAR PROGRAM SK KAMALUDEEN MADANI SPEECH

நபித்தோழர்களின் கண்ணியமும் நவீன கொள்கைகளும்.

பஹ்ரைன்-ஈதுல்-ஃபித்ர்1433

ஈமானுக்கெதிரான ஷீஆவின் ஊடுறுவல்



ஈமானுக்கெதிரான ஷீஆவின் ஊடுறுவல்

காலத்திற்கு காலம் முஸ்லிம் சமூகத்திற்குள் வழிகெட்ட கொள்கைகள் ஊடுறுவது போல் இக்காலப்பகுதியில் ராபிளா என்னும் ஷீஆவின் வழி கெட்டகொள்கைகள் பரவி வருகின்ற அபாயத்தை காண்கிறோம்.
நம்நாட்டில் பல்வேறு இயக்கங்கள் ஜமாஅத்கள் உள்ளன. இந்த ஜமாஅத்களுக்கிடையில் இயக்கரீதியான வேறுபாடுகள் காணப்பட்டாலும் ஒரே அல்லாஹ் ஒரே குர்ஆன் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் என்பதில் எக்கருத்துவேறுபாடும் கிடையாது. முழு முஸ்லிம் உலகமும் ஏற்றிருக்கின்ற ஹதீஸ் கிரதங்கள் ஒன்றே என்பதிலும் முரண்பாடுகளில்லை. சஹாபாக்கள் சுவனவாசிகள் என்பதிலும் சந்தேகங்கள் இல்லை. ஆனால் ராபிளா ஷீஆவை பொருத்தவரை இக்கோட்பாடுகளை மொத்தமாகவே நிராகரிக்கின்றனர். இஸ்லாம் என்ற பெயரில் ஷீஆ என்ற மதப் பிரிவை உண்டு பண்ணி அந்த மதத்தை ஏற்றுக் கொண்டவர்களே உண்மையான முஸ்லிம்கள் என்றும் ராபிளிகளான ஷீஆ அல்லாதவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்றும் கூறுகின்றனர்.

உலகமும் அறிவியலும்


உலகமும் அறிவியலும்

மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம் வந்ததால் ஜூதி மலைக்கு மேல் கப்பல் நிலை கொண்டது. இம்மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இதன் உயரம் 16 ஆயிரம் அடியாகும். துருக்கியில் உள்ள அராராத் மலை (ஜுதி மலை) மீது பணிகளுக்கிடையில் கப்பல் ஒன்று புதைந்து கிடப்பதை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர்.

இவ்வளவு பெரிய கப்பல் மலையின் மீது அமர வேண்டுமானால் அந்த அளவுக்குப் பெருவெள்ளம் ஏற்பட்டால் தான் சாத்தியம். இந்தக் கப்பலை அத்தாட்சியாக விட்டு வைத்தோம் என்று இறைவன் கூறுவது நிறைவேறி திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கிறது


நுஹ் நபி அவர்கள் முக்கியத்துவத்துடன் குர்ஆனில் குறிப்பிடப்படும் இதைத் துதர்களில்ஒருவராக இருந்தார்கள்.

ஓரின சேர்க்கை பற்றி இஸ்லாம்

இந்த ஓரின சேர்க்கை  பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது  என்று பார்ப்போம்.

இந்த ஓரின சேர்க்கை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு சமுதாய த்திடம்    இருந்தது. அதை ஒழிப்பதற்காகவே அல்லாஹ் லூத்[ அலை] எனும் நபியை அனுப்பி வைத்தான்.
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّن الْعَالَمِينَ      
மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ  முனைந்தீர்கள்? "[7:80 ]


إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ النِّسَاء بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ


"
மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்."[7:81 ]