சனி, 20 ஏப்ரல், 2013

இளைஞர் சமுதாயமே! ஈமானை எங்கே தொலைத்தீர்கள்?

ஆக்கம்: -எம்.எம். ஆயிஷா திஹானி

'நம்பிக்கையாளர்களான ஆண்களிடம், அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் (நபியே!) நீர்  கூறுவீராக! இதுவே அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.'  (24:30)

தற்காலத்தில் உலகம் நவீன அறிவியல் வளர்ச்சியின் உச்சகட்டத்தைத் தொட்டுள்ளது. நவீன தொழிநுட்ப தொடர்பாடல் சாதனங்களின் பயன்பாட்டால் உலகம் ஒரு குக்கிராமமாக மாறிவிட்டதுளூ உள்ளங்கையிலேயே உலகம் வந்துவிட்டது என அனைவராலும் சொல்லப்படுவது நாம் அறிந்த விடயமே. மறு புறமாக மனித மாண்புகளும் மறைந்து செல்கின்றமையும் நிதர்சன உண்மையாகும்.

திங்கள், 1 ஏப்ரல், 2013

மனம் திறந்த மடல்…



அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)

... வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் கொள்கையில்உறுதியையும்மனவலிமையையும்தந்தருள்வானாக!அல்லாஹ்வின்மகத்தானகிருபையால்மிகப்பெரிய போராட்டங்களைச் சந்தித்து நாம் பெற்ற பாக்கியமானஉண்மையான ஓர் இறைக்கொள்கை என்னும் பாக்கியத்தை நம்மில் பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காகபலவிதமான சூழ்ச்சி வலைகள் நம்மைச் சுற்றிப் பின்னப்படுகின்றன. நம்மீது இல்லாத பொய்யானகுற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றனர். நம்முடைய செயல்பாடுகளை முடக்க வேண்டுமென்பதற்காக அயராதுமுயற்சிக்கின்றனர். வரலாறு தெரியாத அப்பாவிகள் குறிப்பாக இளைஞர்கள் இவர்களது பசப்பு வார்த்தையில்மயங்கி ஏமாந்து விடுகின்றனர். அவர்கள் நம்மைப்பற்றிக் கூறுவதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டுஅப்படியே நம்பிவிடுகின்றனர்.