திங்கள், 1 ஏப்ரல், 2013

மனம் திறந்த மடல்…



அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)

... வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் கொள்கையில்உறுதியையும்மனவலிமையையும்தந்தருள்வானாக!அல்லாஹ்வின்மகத்தானகிருபையால்மிகப்பெரிய போராட்டங்களைச் சந்தித்து நாம் பெற்ற பாக்கியமானஉண்மையான ஓர் இறைக்கொள்கை என்னும் பாக்கியத்தை நம்மில் பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காகபலவிதமான சூழ்ச்சி வலைகள் நம்மைச் சுற்றிப் பின்னப்படுகின்றன. நம்மீது இல்லாத பொய்யானகுற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றனர். நம்முடைய செயல்பாடுகளை முடக்க வேண்டுமென்பதற்காக அயராதுமுயற்சிக்கின்றனர். வரலாறு தெரியாத அப்பாவிகள் குறிப்பாக இளைஞர்கள் இவர்களது பசப்பு வார்த்தையில்மயங்கி ஏமாந்து விடுகின்றனர். அவர்கள் நம்மைப்பற்றிக் கூறுவதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டுஅப்படியே நம்பிவிடுகின்றனர்.

வெள்ளி, 22 மார்ச், 2013

தவறு செய்யப் போகின்றாயா? தொடர் 02

எழுதியவர் சகோ. பைரூஸ்

சகோதரனே!
    நீ தவறு செய்யாமல் இருப்பதற்காக அத்தவறை செய்வதற்கு முன் சில விடயங்களை நினைத்துப் பார்! என சென்ற தொடரில் சில விடயங்களைக் குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடரிலேயே,

 09.நீ தவறு செய்வதற்கு முன் நான் இந்தத் தவறை செய்து விட்டால் நபி(ஸல்) அவர்களுக்குரிய 'ஹவ்லுல் கவ்ஸர்' எனும் நீர்த் தடாகத்தில் நீர் அருந்தக் கூடிய பாக்கியம் இல்லாமல் போய்விடும். என்பதை சற்று நிதானமாக நின்று சிந்தித்துப் பார்!
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'நான் நீர்த் தடாகத்தில் இருப்பேன். என்னை யார் கடந்து செல்கின்றாரோ அவர் அதில் நீர் பருகுவார். யார் அதில் நீர் பருகினாரோ அவருக்கு ஒருபோதும் தாகமே ஏற்படாது. என்னிடம் (நீர்ப் பருக வந்த) சில கூட்டங்கள் திருப்பியனுப்பப்படுவர். அவர்களை நானும் அறிவேன். அவர்களும் என்னை அறிந்திருப்பார்கள். பின்னர் எனக்கும் அவர்களுக்கும் மத்தியில் திரையிடப்பட்டு விடும். எனவே நான் கூறுவேன். 'நிச்சயமாக அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் (அவர்களை விட்டு விடுங்கள்)'. 'அவர்கள் உமக்குப் பின்னால் (மார்க்கத்தில் புதிதாக) உருவாக்கியவைகளை  நீர் அறியமாட்டீர்' என்று கூறப்படும். எனவே நான் 'எனக்கு மாறு செய்தவர்கள் தூரமாகட்டும்' என்று கூறுவேன்.' (அறிவிப்பவர்: அபூஸஈத் அல்ஹுத்ரிய்யீ(ரழி), ஸஹ்ல் பின் ஸஃத்(ரழி), ஆதாரம்: புஹாரி)

வியாழன், 14 மார்ச், 2013

தவறு செய்யப் போகின்றாயா? தொடர் 01

எழுதியவர்சகோ. பைரூஸ்


இவ்வுலகில் அல்லாஹ் மனிதனைத் தவறுக்கும், மறதிக்கும் மத்தியிலே படைத்துள்ளான்.

அவ்வகையில் ஒரு மனிதன் தவறு செய்வதற்கு ஷைத்தான் தூண்டுதலாய் இருக்கின்றான். ஒரு மனிதன் தவறு செய்வதற்கு முன் தான் இத்தவறை செய்தால் தனக்கு ஏற்படக் கூடிய எதிர் விளைவுகள் என்ன? என்பதைப் பற்றிச் சிந்தித்தால் அந்தத் தவறிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.

அவ்வகையில் தவறு, பாவம் செய்வதற்ககு முன்னர் பின்வரும் விடயங்களைப் பற்றி சற்று நேரம் சிந்திக்க வேண்டும். அவையாவன,

திங்கள், 25 பிப்ரவரி, 2013

ஹதீஸ்_கலை_ஓர்ஆய்வு-மன்சூர் மதனி

ஹதீஸ்_கலை_ஓர்ஆய்வு-மன்சூர் மதனி

புனித பூமி பலஸ்தீனும் முதல் கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவும்

பலஸ்தீன் பூமியை இஸ்லாம் புனித பூமி என்று கூறுகின்றது. அங்குள்ள மஸ்ஜிதுல் அக்ஸா என்பது முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகும். இது குறித்த சில குறிப்புக்களை இந்த ஆக்கத்தில் முன்வைக்க விரும்புகின்றோம்.
01. அருள் வளம் பொருந்திய பூமி:
பலஸ்தீன் பூமி இஸ்ரவேல் சமூம் உருவாக முன்னரே பரகத் பொருந்திய பூமி என அழைக்கப்பட்டது.